Thursday, 23 July 2015
Tuesday, 21 July 2015
சமீபத்தில் கிறுக்கியவை
தேடல்
உன் கா(மம்)தல் முழுவதையும்என் கழுத்திலும்
தோளிலுமே
தேடி அலையும் போது
மரணித்து மரணித்து மீண்டும் மீண்டும் ஜனனம் பெற்று சிலிர்த்தே போகிறேன்
(கற்பனை மட்டும்தான்பா
❌❌எங்க அம்மாட்டலாம் சொல்லிடப்பிடாது என்ன ) உனக்கு மட்டும்
உனக்கான கவிதை அவ்வளவாய் இன்றளவும் எழுதப்பட வில்லை. .
உனக்கான கவிதை இன்றளவும் எழுதப்பட வில்லை.
உனக்கான கவிதை இன்னும் எழுதப்படாமலே இருக்கிறது
உனக்கான கவிதையை நான் இன்றும் எழுதப் போவதில்லை. .
நான் போகும் பாதையில் நீ
60ல் செல்லும் உன் வேகம் 20 ஆக குறையும் போது என் இதய துடிப்பின் வேகம் அதிகரிக்காமல் இல்லை. . . நான் செல்லும் பாதையில்🌉🌌 இன்று நீ
சகோதரி என்ற பிறகு அடுத்த வார்த்தைத் தடுமாறி தடுக்கிறது. .
அண்ணேண்கிட்ட என்னத்த பேசனு அப்டியே விட்டறது
காதலன்
கவிதை எழுதத் தெரியாதவனை காதலிப்பதாய்(பொய் சொன்னாலும் பரவால)
Sunday, 3 May 2015
ஞாயிற்றுக்கிழமை என்பதால் மட்டும்!!!!!
எழுதத்தொடங்கும் போது
இவ்வளவு நாள் ஏன் என்னைத் தொடவில்லை என்று
செல்லமாய் சினுங்கியது என் பேனா!!
03/05/15
ஊர் திருவிழா:
திருவிழாவில் பின்னாடியே சுற்றியது ஒரு
கூட்டம்...
(மொக்க ஃபிகருக்கே ரவுண்டு கட்டுவானுகளே-ங்கிற
டயலாக்லாம் நினைக்கக்கூடாது என்ன???)
கடந்துசெல்ல முயற்ச்சிகையில்
“பெண்களுக்கே
முன்னுரிமை”
என்று நகர்ந்தும் அருகினில் அவன்...(அறும்பு
மீச குறும்பு பார்வ)
காதோரம் ஒரு முனுமுனுப்பு”உன் பெயர் என்ன
என்று??”
கேட்டும் கேட்காததாய் நகர்ந்தேன்..இன்னும்
கேட்கிறது...
(எவ்ளோதான் டெக்னாலஜி வளந்தாலும் நீங்க
திருந்த மாட்டிங்கடா)
திருவிழாக் கடை:
பிம்பங்கள் கண்ணடியில் விழ,கண்களும்
சேர்ந்து விழ
கைகள் தலைக்குச் சென்றது..
(இதுக்கு பேரும் அனிச்சைசெயல் தானோ???)
பள்ளிக்கூட நண்பன் சந்திப்பு:
(“எங்கேயோ பார்த்த நியாபகம் ,என்றே தான்
சொல்லும் நாள் வரும்” பாடல் வரி தன்னிச்சையாக மனதில்)
பேசத்தெரியதவளாய் ஆகிவிட்டேன் சில
நொடிகளில்...
கண்கள் நான்கு வார்த்தை பேசியது..
உதடுகள் இரண்டு வார்த்தை பேசியது...
(அந்த நாளு வார்த்த”இன்னுமாப்பா என்ன
நியாபகம் வச்சுருக்க”...அப்பிடியே யோசிக்கிறது...அப்ப அந்த ரெண்டு
வார்த்த?????அதலாம் சொல்ல முடியாது போப்பா)
தாயிடம்:
(சொல்லிருக்ககூடாதுதான் இருந்தாலும்
சொல்லிப்பார்த்தேன்
)
“மா,அந்தப்பையன் அழகா இருக்கான்-ல “
என்றேன்.
“பருவத்துல பண்ணிக்குட்டிகூட அழகதான்
தெரியும்” என்றாள்..
உண்மைதான் போல..( மைண்ட் வாய்ஸ்:உன்க்கிட்ட
போய் சொன்னேன் பாரு...)
நடந்தது இதான்:
குறும்புகள் மனதில் குறுகுறுக்க
இருப்பினும் குறுக்கிக்கொண்டு நல்லவளாகவே (நடித்து)
முடிந்தது...
Friday, 13 March 2015
என் பேனா மை என்னிடம் கோபித்துக்கொள்ளவில்லை
எழுததான் ஆசை..
எதை எழுத வேண்டுமென்று தெரியவில்லை...
இருப்பினும் எழுதுகிறேன்...
எதை எழுதுகிறேன் என்று தெரியாமலே...
எழுது எழுது என்கிறது மனது.
எதை எழுத வேண்டுமென்று மட்டும் கூற மறுக்கிறது...
எழுதி எழுதி பார்த்தும் என்ன எழுதுவதென்று மட்டும் தெரியவில்லை...
இருப்பினும் கை நிறுத்தவில்லை...
கிறுக்குகிறேன் என்று தெரிந்தும்
என் பேனா மை என்னிடம் கோபித்துக்கொள்ளவில்லை...
தொடர்ந்து எழுதுகிறது..
அதற்கும் தெரியவில்லை எதை எழுதுகிறோம் என்று...
நிறுத்த மனமில்லை...
ஏதும் தோன்றவில்லை..
இருந்தும் எழுதுகிறேன்.....
ஏன் எழுதுகிறேன்ன்???
எல்லோரும் எழுதுகிறார்கள் என்றா???
எழுதினால் எனக்கென்ன கிடைக்கப்போகிறது???
ஏன் எதைப்பற்றி எழுதுவதென்று தெரியாமலே எழுதுகிறேன்???
ஏன் இப்படி ஒரு பைத்தியக்காரத்தனம்???
ஏன்,எதற்கு இப்படி தோன்றுகிறது???
விடைகள் தெரியாமல் எழுதுகிறேனா????விடைகள் தேடி எழுதுகிறேனா???
************************************img src
reply here
Friday, 19 December 2014
ஏன் இவளின் கதறலின் குரலொலி உன் செவிமடலை எட்டவில்லை?
ஏன் இவளின் கதறலின் குரலொலி உன் செவிமடலை எட்டவில்லை?
ஆதங்கம் ,அழுகை,கோபத்தின் வெளிப்பாடாகவே இந்த பதிவு
பொறிக்கப்படுகிறது.
அழகான வார்த்தைகள் தேடி அலையவில்லை மனது, என் கோபத்தையும் அழுகையையும்
அலங்கரிக்க..
என்ன நிகழ்கிறது?
எங்கிருந்து தொடங்கியது?எதன் பெயரில் நடக்கிறது?
யார் மேல் குற்றம் சொல்வது?
தவறு என்று தெறிந்தே தவறுகள்...
தவறு என்பது கூட பொருத்தமான வார்த்தை இல்லை.இது வன்முறை..
வன்முறையின் உருவம்????
எண்ணிப்பார்க்கும் போதே வலி தாங்க முடியவில்லை..அனுபவித்த அவளுக்கு??
அவன் மேல் தவறா? அவள் மேலா?ஊடகத்தின் மேலா?
இல்லை நாகரீக வளர்ச்சியின் விளைவா?ஏன் இந்த வன் உணர்வு??
உடலுக்காக மட்டும் இவ்வளவு கொடுமைகளா???:(:’(:’(:’(
அவளுக்கு என்ன தெரிந்திருக்கும்??தெரிந்து கொள்ளக்கூடிய வயதா இது???
ஏன் எங்கே சென்றது குழந்தைகளின் மீதிருந்த அன்பு,பரிவு?ஏன்,எது இவர்களை
இவ்வாறு செய்ய தூண்டியது?
இவ்வாறு செய்துக்கொண்டே இருந்தால் ஆண் இல்லாத சமூகம் கேட்பதா?பெண்
இல்லாத சமூகம் கேட்பதா???
அந்த பிஞ்சு எப்படி தாங்கும்?அவள் எத்துணை தொல்லைகளை ஏற்பாள்??
மங்கையராய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும் என்றான் அவன்..
வரும் தலைமுறை பெண் சக்தியை முடக்கி கொண்டே வருகிறான்....
எங்கு கொண்டு சேர்க்கும் இவளை இந்த சமூகம்????
தன் குழந்தைகளின் மீது அடுத்தவர் இந்த வன்முறையில் ஈடுபடுவது
ஒருபுறம் இருக்க ,ஏன் தன் தந்தை ,தன் அண்ணன் என்று நம்பும் உறவுகளை,ஏன் இவளை
ஏமாற்றுகிறது?????
இதற்கு மட்டும் 53% குழந்தைகள் ஆளாயிருக்கும் நிலைமையில் எப்படி
அடுத்த தலைமுறை பெண் குழந்தைகள் சக்தி வாய்ந்ததாக,நம்பிக்கையுடன் இந்த
சமூதாயத்தில் வளரும்..
இந்த உள்ளுவுணர்க்கு எவ்வாறு விளக்கம் கொடுப்பது?
குழந்தைகளின் கண்ணீர்,கதறல் எத்துணை காதுகளை சென்றடைந்து என்ன பயன்?
இந்த வன்ணுர்வை எப்படி களைய போகிறோம்??
குற்றத்தை எவர்(தன்) மேல் என்பதே குழப்பத்தின் நிலைமை என்றால் எவ்வாறு
நன்நெறியை வழங்குவது???
அவள் இவ்வளவு துன்பங்களுக்கு ஆளாவாள் என்று தெரிந்திருந்தால் கருவிலே
காணாமல் போயிருப்பாள்....
தொடுதலில் வித்தியாசம் எப்படி அறிவாள்???
ஆசை அழிவிற்கு காரணம் என்றால் ஆசைக்கு காரணம்?
இரசாயன மாற்றங்களுக்கு காரணம்?
ஆடை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்???
தண்டனை மட்டும் தீர்வா?
செக்ஸ் எஜுக்கேஷன் தீர்வு என்றால் (அவளை அவளே பாதுகாத்துகொள்ள
உதவும்,அதன் பற்றிய புரிதலுக்கு உதவும்) அவன் திருந்துவதற்கு வழி(லி)களே இல்லையா?
ஏன் மலர்வதற்கு முன்பே கசக்கி விடுகிறீர்கள்?
அவள் துடித்திருப்பதை நினைத்தாலே துடிதுடித்து போகிறேன்...
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமலும்,தாங்க முடியமலும் கண்ணீராய்
கரைகிறேன்...
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை???
தீர்வுகளை நோக்கிய பயணத்துடன் .....
Labels:
சிறுமி,
தொடுதலில் வித்தியாசம்,
பலாத்கார வல்லுணர்வு
Wednesday, 5 November 2014
BEADS ON A STRING
BEADS ON A STRING
AT LAST NIGHT….
These days I need a
kerchief!!
To wipe my mischief!
Let I pen to poem,
My tear scrolls down ..
Before the ink stick
on my paper
My tears always
first….
I don’t wanna be
your heroine
Atleast, pleasing to
never make me a fool!!
Yes,I accept
My fingers are shivering,
But,
My heart beats yet powerful!!
There is much
awaited for me,
My pen,
My papers,
My
books,
My mother
Finally,my smileJJ….
I don’t have time to
scared or love..
Funny thing is
I don’t want get scared anymore!!
Again I try to pen
down,
I know,this wont be a
piece of cake
Once in a blue moon,
Felt like time flies
Eye lids are still
open …
Now,night changes to
day.
Seeking for sleep,
Blinking eyes only
remains…
Penning English is
something fishy
Just wanna to rescue
from these sort of feelings…
Now,I m not a good
writer,
But,I will…
Creatity
grows!!!!thats tight….
I put end
Yet,It wont end…..
Subscribe to:
Posts (Atom)