Sunday 3 May 2015

ஞாயிற்றுக்கிழமை என்பதால் மட்டும்!!!!!




எழுதத்தொடங்கும் போது
இவ்வளவு நாள் ஏன் என்னைத் தொடவில்லை என்று செல்லமாய் சினுங்கியது என் பேனா!!

03/05/15

           
ஊர் திருவிழா:
திருவிழாவில் பின்னாடியே சுற்றியது ஒரு கூட்டம்...
(மொக்க ஃபிகருக்கே ரவுண்டு கட்டுவானுகளே-ங்கிற டயலாக்லாம் நினைக்கக்கூடாது என்ன???)
கடந்துசெல்ல முயற்ச்சிகையில்
                  “பெண்களுக்கே முன்னுரிமை”
என்று நகர்ந்தும் அருகினில் அவன்...(அறும்பு மீச குறும்பு பார்வ)
காதோரம் ஒரு முனுமுனுப்பு”உன் பெயர் என்ன என்று??”
கேட்டும் கேட்காததாய் நகர்ந்தேன்..இன்னும் கேட்கிறது...
(எவ்ளோதான் டெக்னாலஜி வளந்தாலும் நீங்க திருந்த மாட்டிங்கடா)

திருவிழாக் கடை:
பிம்பங்கள் கண்ணடியில் விழ,கண்களும் சேர்ந்து விழ
கைகள் தலைக்குச் சென்றது..
(இதுக்கு பேரும் அனிச்சைசெயல் தானோ???)
பள்ளிக்கூட நண்பன் சந்திப்பு:
(“எங்கேயோ பார்த்த நியாபகம் ,என்றே தான் சொல்லும் நாள் வரும்” பாடல் வரி தன்னிச்சையாக மனதில்)
பேசத்தெரியதவளாய் ஆகிவிட்டேன் சில நொடிகளில்...
கண்கள் நான்கு வார்த்தை பேசியது..
உதடுகள் இரண்டு வார்த்தை பேசியது...
(அந்த நாளு வார்த்த”இன்னுமாப்பா என்ன நியாபகம் வச்சுருக்க”...அப்பிடியே யோசிக்கிறது...அப்ப அந்த ரெண்டு வார்த்த?????அதலாம் சொல்ல முடியாது போப்பா)
தாயிடம்:
(சொல்லிருக்ககூடாதுதான் இருந்தாலும் சொல்லிப்பார்த்தேன் )
“மா,அந்தப்பையன் அழகா இருக்கான்-ல “ என்றேன்.
“பருவத்துல பண்ணிக்குட்டிகூட அழகதான் தெரியும்” என்றாள்..
உண்மைதான் போல..( மைண்ட் வாய்ஸ்:உன்க்கிட்ட போய் சொன்னேன் பாரு...)

நடந்தது இதான்:
குறும்புகள் மனதில் குறுகுறுக்க
இருப்பினும் குறுக்கிக்கொண்டு நல்லவளாகவே (நடித்து) முடிந்தது...