Showing posts with label சங்க நூல்கள். Show all posts
Showing posts with label சங்க நூல்கள். Show all posts

Tuesday, 29 July 2014

வாழ்க தமிழ்





                            வாழ்க தமிழ்


    வறுமை என்றதும் நினைவில் வருவது பணப்பற்றாக்குறையினால் தள்ளாடி நிற்பது தான்!

ஆனால் இன்றோ ??

நமது மொழியின் நிலை?

தமிழர்களின் 'நா' தாய்மொழி பேச தயங்குவதேன்?????

தமிழ் பேசுவதை தரக்குறைவு என்று நினைப்பதேன்??????

இளைய தலைமுறையே!

பிற மொழி கலந்து பேசி தமிழ் மொழியின் நிலையை கவலைக்கிடமாக்கியதேன்?????

தமிழர்களே தமிழ் படிக்க தயங்குவதேன்?????

தமிழ் வழி கல்வி எங்கே?????

தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதேன்?????

தமிழின் நிலை எங்கே செல்கிறது?????

அழியப்போகும் மொழிகளின் நிலையில் நம் மொழிக்கு எட்டாவது நிலை ஏன்??????

ஏன் இந்த நிலைக்கு இட்டுச் சென்றோம் நம் மொழியை?????

வெட்கம்! நாம் ஏன் இந்த நிலைக்கு நம் மொழியை இட்டுச் சென்றோம்????



தமிழ் வெறும் மொழியா?

உலக நாகரித்திற்கே பங்களிப்பு செய்ததல்லவா நம் மொழி!!!

இப்படிப்பட்ட மொழியா இந்த அழிவை  நோக்கி செல்கிறது?????



விழித்துக்கொள் தமிழனே!!!!



இந்த தலைமுறையே தமிழைக் கற்கவில்லையென்றால் எவ்வாறு வரும் தலை முறை தமிழை வரவேற்கும்????

பார் போற்றிய நம் மொழியை பாதுக்காக்க வேண்டாமா?

பிற மொழி கற்கிறேன் என்று  தாய்மொழியை மறந்து கொண்டிருக்கிறாய் தமிழனே!!!!!!


வறுமையிலிருக்கும் நமது மொழியை என்றும் அழியா மொழியாக மாற்றுவோம் என்று இன்றாவது உறுதி கொள்வோம்...


வரும் தலைமுறைக்கு தமிழைக் கற்பித்து தமிழ் வாழ வழிச்செல்வோம்..

வீழ்வது யாராயினும் வளர்வது தமிழாகட்டும்!!!!!

Monday, 28 July 2014

மொழி சிறப்பு



                        மொழி சிறப்பு

தாய்மொழியாம் தமிழ் மொழி!
என்னே!உன் கற சிறப்பு!
‘நா’ மடக்கச் சொல்லிக்கொடுத்து நாவடக்கம் கற்று தந்தீர்.
கோடி பூக்கள் மலரப்போகிறது,உன் சிறப்பைக் கூற!
இதோ,இங்கு உனக்காக மாணவத் தலைமுறைகள்(புதிய தலைமுறைகள்) வலைப்பூவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தொல்காப்பியன் தொடங்கியதிலிருந்து வளர்ந்து கொண்டே இருக்கிறாய்.
கம்பன் கற்பித்துக் கொண்டே இருக்கிறான்.
உலக பொதுமறையை ஏந்தி கொண்டிருக்கிறாய்.
உன்னில் தான் எழுத்துகளும் அதிகம், எழுச்சிகளும் அதிகம்,ஏற்றங்களும் அதிகம்..அதனால் தான் உலக பொதுமறையை தமிழில் இயற்றினான் போலும்!
தமிழன் என்று சொல்லடா!தலை  நிமிர்ந்து நில்லடா! என்றவன் என் மொழியை வசைபாடுவதற்கு கண்டிபதற்கும் நான் பயன்படுத்த மாட்டேன் என்றார் மகாத்மாவிடம்.
வாழ்வதற்கும்,வாழ வைப்பதற்குமே அன்றிலிருந்து பயன்படுகிறாய்.
என்னே அழகு!

அவன் சொன்னான் என் கல்லறையில் நான் ஒரு தமிழ் மாணவன் என்று எழுதி வையுங்கள்-ஜி.யு.போப்.இறப்பு வரை,இல்லை இறந்த பிறகும் பயணத்திருக்கிறாய் பிற மொழியை தாய்மொழியாய் கொண்டவனுக்கும்..
தமிழில் பெயரையே மாற்றுமளவுக்கு உன் மேல் அன்பு கொண்டிருந்தால் அவன் வாழ்வை சரித்திரமாக்கினாய்-வீரமாமுனிவர்.
காணக்கிடைத்த செல்வமாய்,புதையலை கால்கடக்க தேடிச் சென்று ஒருங்கிணைத்து தமிழ் நூல் வாழ வழிச்செய்தார்!எங்கள் தாத்தா உ.வே.சாமி நாத ஐயர்.
என்னே!உன் சிறப்பு...