Showing posts with label பண்பாடு. Show all posts
Showing posts with label பண்பாடு. Show all posts

Monday, 11 August 2014

திண்ணை வீடு?




  திண்ணை வீடு?
கிராமத்து திண்ணை வீடுகள் நிறைய கதைகள் சொல்லும்...

திண்ணைகளில் ஒளிந்திருந்தது, தமிழ் பண்பாடு.

களிப்பான கலாச்சாரம்!!!!

மறந்து போன மடமைகள் நாம்...


முந்தைய தமிழன் வீடுகளில்,

திண்ணை என்றொரு அங்கமுண்டு..

வழிப்போக்கர்கள் ஓய்வெடுப்பார்கள்..

விருந்தோம்பலும் நடக்கும்...

சம்மணமிட்டு அமர்ந்தார்கள்.....





சாப்பிடும் போது,

‘கால்கலுக்கு குருதி ஓட்டம் தேவையில்லை’ என்று அன்றே அறிந்தவர்கள்..

                       ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று

அன்புக்கு அடித்தளம் அமைத்து வாழ்ந்தவர்கள்.....

பாட்டி வைத்தியத்தில்  நோயை தீர்த்தார்கள்...

கோலம் போடுவதில் கூட இரக்கத்தை காட்டியவர்கள் தமிழச்சிகள்..



இன்றைய தமிழன் வீடுகளில்,

ஆங்காங்கே, அடுக்கு மாடி கட்டிடங்களும்,

அவற்றை சுற்றி இறுக கட்டிக் கொண்டு நிற்கும் சுற்று சுவர்களும் தான்!!!

திண்ணை மண்ணோடு மண்ணாகி விட்டது!!!

சுதந்திரம் என்ற பெயரில் சொந்தம் மறந்து அலைகிறோம்!!!!

நாற்காலியில் அமர்ந்துதான் உண்கிறோம்,

உணவு முறையையும் மாற்றி கொண்டு நோய்களை சம்பாதித்து கொண்டிருக்கிறோம்..

கோலம் போடுவதும் , தாவணி உடுத்துவதும்

விழாக்காலங்களில் மட்டுமே நிகழ்கிறது இங்கு!!!!.


பூ வைப்பதற்கு புது புது அர்த்தகள்!!!
தமிழ்,அரசியல்வாதிகளின் உடையாகவே மாறிவிட்டது வேட்டி!!!
பாட்டி சொன்ன கதைகளை மறந்து போன தலைமுறைகளாய் வாழ்கிறோம்...

“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து”-என்ற குறளை மறந்து விட்டோம் போலும்..

கிராமம் என்றொடு அமைப்பு இல்லையெனில் என்றோ முற்றிலும் அழிந்திருக்கும் தமிழர் பண்பாடு...

கலாச்சாரத்தையும் ,பண்பாட்டையும் அழித்து வருவதா நாகரீக வளர்ச்சி??