Monday 28 July 2014

வணக்கம் தமிழ்



                        வணக்கம் தமிழ்
     
        தமிழ் மொழி போல உலகின் பெரும் பான்மையான மொழிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மொழி வேறு எதுவும் இல்லை. தமிழ் இனம் போல் உலகம் முழுவதும் பரந்து வாழும் இனம்  வேறு எதுவும் இல்லை.சப்பானிய அறிஞர்களான சசுமுசிகா,அகிராஃபியூசிவாரா,மினோருகோ ஆகிய மூவரும் இணைந்து பல ஆண்டு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு சப்பானிய மொழியோடு தொடர்புடையது என்பதை அதிகாரப்பூர்வமாக 1973ல் உலகுக்கு அறிவித்தனர்.
    தாய்லாந்து தாய்மொழியிலும்,கொரியன் மொழியிலும்,இந்தோனேசிய மொழியிலும், தென் ஆப்பிரிக்காவின் பல மொழியிலும் தமிழ்ச்சொற்கள் பல திரிந்த நிலையில் வழங்கி வருகின்றன. இந்திய மொழிகளிலேயே ஏன் உலக மொழிகளிலேயே மூத்த மொழி நம் தமிழ் மொழி. பூம்புகார் அகழ்வாய்வு தரும் தகவல்கள் மூலம் கி.மூ.10000 ஆண்டுகள் நாகரிக நாகரிகத்தில் சிறந்திருந்தனர்.தமிழர்கள் இன்று உலகில் மொத்தம் 149 நாடுகளில் வாழ்கின்றனர்.
   உலகம் ஆற்று வெள்ளத்தில் அழிவை சந்தித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆற்றின் குருக்கே அணையைக் கட்டி ஆற்று நீரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும்,பாசனத்திற்கு உபயோகிக்கஅவும் முடியும் என்று உலகின் முதல் அணையாம் கல்லணையை கட்டி உலகிற்கே வழிகாட்டியவன் நம் தமிழன் கரிகாலன்,யானைகளை அடக்கி கட்டிடங்கள் கட்டவும்,போருக்கு பயன்படுத்தவும் கற்றுக்கொடுத்தவன் தமிழன்,உலகின் முதல் கப்பல் படிய நிறுவியது.தமிழன்,மொத்த வாழ்க்கையையும் மூன்று அத்தியாயத்தில் பிரிந்து இரண்டடியில் கொடுத்து உலகமே வியந்து பின்பற்றும் திருக்குறளை கொடுத்தது தமிழன்.
    சேக்ஷ்பியரின் புத்தகங்களைப் படித்து பெருமை கொள்ளும் நமக்கு கம்பரைப்பற்றி அறிந்து கொள்ள் முடிவதில்லை. நீயுட்டனைத் தெரிந்த அளவுக்கு தமிழ்ச் சித்தர்களை பற்றித் தெரிவதில்லை.பண்டைய தமிழரின் கண்டுபிடிப்புகளையும் பெருமைகளையும்,கற்றலையும்,கலைகளையும் பொதுவுடைமையாகவும், உலகறியவும் செய்திருந்தால் இன்றைய நவீன உலகின் அனைத்து துறைகளின் கண்டு பிடிப்புகளிலும் தமிழன் முன்னோடியாக இருந்திருப்பான்.
  எனவே நம் பெருமையை நாம் மட்டுமே பேசிக் கொண்டிருப்பதையும் தாண்டி நம்மை பற்றி உலகறியச் செய்ய  வேண்டும். நம் செய்யுள்களும்,இலக்கியங்களும்,அறிவியலும் ,வானியலும் ,கலையும் ,நயமும்,வீரமும்,மரபும் பிறமொழி பேசுபவர்களுக்கும் உலக மொழிகளில் எடுத்துரைப்போம்,உலகமெங்கும் நம்மை அரியச் செய்வோம்.ஓர் இனத்தின் ஆற்றலும்,பெருமையும் அதை அடுத்த தலைமுறைக்கு அதை கொண்டு சேர்ப்பதில் தான் உள்ளது.  

No comments:

Post a Comment