Thursday, 21 August 2014

தமி(ழ்)ழரின்,தமிழ்நாட்டின் பற்றிய துளிகள்


      தமி(ழ்)ழரின்,தமிழ்நாட்டின் பற்றிய துளிகள்

தமிழ் மற்றும் தமிழரின் பெருமைகள் மற்றும் தனித்துவம்.

இதோ,

தமிழில் மொத்தம் 247 எழுத்துகள் உள்ளது..12 உயிரெழுத்து,18 மெய்யெழுத்து,

216 உயிர்மெய்யெழுத்து,1 ஆயுத எழுத்து...


இதில் 7 உயிரெழுத்துகள் தனித்து பொருள் தரும்.

அவை

*     ஆ-பசு,

*     -ஈதல்,பூச்சி,

*     உ-சிவபெருமான்,

*     -தசை,

*     ஏ-அம்பு,

*     ஐ-ஐந்து,அழகு,வியப்பு,

*     ஓ- வினா, மதகு



32 உயிர் மெய்யெழுத்துகளும் தனித்து நின்று பொருள் தரும்..

கா-சோலை, காத்தல்
கூ-பூமி, கூவுதல்
கை-கரம், உறுப்பு
கோ-அரசன், தலைவன், இறைவன்
சா-இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ-இகழ்ச்சி, திருமகள்
சே-எருது
சோ-மதில்
தா-கொடுத்தல், கேட்பது
தீ-நெருப்பு
து-கெடு, உண், பிரிவு,உணவு,இறகு
தூ-வெண்மை, தூய்மை
தே-நாயகன், தெய்வம்
தை-மாதம்
நா-நாக்கு
நீ-நின்னை
நே-அன்பு, நேயம்
நை-வருந்து, நைதல்
நொ-நொண்டி, துன்பம்
நோ-நோவு, வருத்தம்
நௌ-மரக்கலம்
பா-பாட்டு, நிழல், அழகு
பூ-மலர்
பே-மேகம், நுரை, அழகு
பை-பாம்புப் படம், பசுமை, உறை
போ-செல்
மா-மாமரம், பெரிய, விலங்கு
மீ-ஆகாயம், மேலே, உயரம்
மு-மூப்பு
மூ-மூன்று
மே-மேன்மை, மேல்
மை-அஞ்சனம், கண்மை, இருள்
மோ-முகர்தல், மோதல்
யா-அகலம், மரம்
வா-அழைத்தல்
வீ-பறவை, பூ, அழகு
வை-வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ-கௌவுதல்

சங்கம்
நிகழ்ந்த ஆண்டு
நிகழ்ந்த இடம்
புலவர்களின் எண்ணிக்கை
நூல்கள்
முதற் தமிழ்ச் சங்கம்
கி.மு.4400
தென்மதுரை
4449
(சிவன்,
அகத்தியர்)
பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்.
(அனைத்து நூல்களும் கடலில் மூழ்கி விட்டன)
இரண்டாம் தமிழ்ச் சங்கம்
கி.மு.3700
கபாடபுரம்
3700
அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்
(தொல்காப்பியம் மட்டுமே கிடைத்தது)
மூன்றாம்
தமிழ்ச் சங்கம்
கி.மு.1850
மதுரை
449
அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்
நாவலன் தீவு:
       சிலப்பதிகாரம் மூலம் முச்சங்க வரலாற்றையும் அறியலாம்.
குமரி கண்டத்தில் தான் தமிழும் தமிழனும் பிறந்தனர்.இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.வரலாற்று அதிசயங்கள் அங்கு தான் நிகழ்ந்தது.
முன்பு,குமரிகண்டம்  “நாவலன்தீவு” என்றழைக்கப்படுகிறது.
இதற்கு பெனீசியர்களின் கல்வெட்டுகள் சான்றாக உள்ளது.
நாம் 2000 வருடம் பழமையானவர்கள் அல்ல.
20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம்!

                                 **************

உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்:
       உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் தமிழன்.அவர்கள்   இராஜ இராஜசோழனும் அவன் மகன் இராசேந்திர சோழனும் ஆவான்.
உலகத் தமிழ் மாநாடுகள்:
*     முதல் உலகத் தமிழ் மாநாடு        -1996,மலேசியா-கோலாலம்பூர்
*     இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு    -1968,இந்தியா-சென்னை
*     மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு     -1970,பாரிஸ்
*     நான்காம் உலகத் தமிழ் மாநாடு     -1974,இலங்கை-யாழ்பாணம்         
*     ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு -1981,மதுரை
*     ஆறாம் உலகத் தமிழ் மாநாடு       -1987,மலேசியா-கோலாலம்பூர்
*     ஏழாம் உலகத் தமிழ் மாநாடு        -1989,மொரீசியஸ்
*     எட்டாம் உலகத் தமிழ் மாநாடு -1995,தஞ்சாவூர்
*     ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு
(உலகத் தமிழ் செம்மொழி மாநாடு)  -2010,இந்தியா,தமிழ்நாடு-கோவை


உலகத் தமிழ் இணைய மாநாடு:
 
*     முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு          -1997,சிங்கப்பூர்
*     இரண்டாம் உலகத் தமிழ் இணைய மாநாடு      -1999,சென்னை
*     மூன்றாம் உலகத் தமிழ் இணைய மாநாடு -2000,சிங்கப்பூர்   
*     நான்காம் உலகத் தமிழ் இணைய மாநாடு       -2001,மலேசியா         
*     ஐந்தாம் உலகத் தமிழ் இணைய மாநாடு         -2002,அமெரிக்கா
(கலிஃபோர்னியா) 
*     ஆறாம் உலகத் தமிழ் இணைய மாநாடு         -2003,சென்னை         
*     ஏழாம் உலகத் தமிழ் இணைய மாநாடு          -2004,சிங்கப்பூர்         
*     எட்டாம் உலகத் தமிழ் இணைய மாநாடு        -2009,செர்மனி    
*     ஒன்பதாம் உலகத் தமிழ் இணைய மாநாடு -2010,கோவை
(உலகத் தமிழ் செம்மொழி மாநாடுடன் இணைந்து நடத்தப்பட்டது)
*     பத்தாம் உலகத் தமிழ் இணைய மாநாடு         -2011,அமெரிக்கா         (பெனிசுலோவியா)
*    பதினொன்றாம் உலகத் தமிழ் இணைய மாநாடு  -2012,இந்தியா,தமிழ் நாடு-சிதம்பரம்
*    பனிரெண்டாம் உலகத் தமிழ் இணைய மாநாடு  -2013,மலேசியா
*    பதிமூன்றாம் உலகத் தமிழ் இணைய மாநாடு    -2014,புதுச்சேரியில் நடக்க உள்ளது.        


 நோபல் பரிசு வாங்கிய தமிழர்கள்:
*     ச.வெ.இராமன்
*     சுப்ப்ரமணியன் சந்திரசேகர்
*    வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன்
                      ****************
செண்பகராமன்-ஜெய்ஹிந்த்:
       
    ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்திற்கு சொந்தமானவர்-செண்பகராமன் என்ற தமிழர். ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் பொறியியல் துறையின் டாக்டர் பட்டம் பெற்றார்.பட்டப்படிப்புக்கு பிறகு, ஜெர்மனியில் தங்கியிருந்தபடியே இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி மூலம் இந்திய விடுதலைக்கு செண்பகராமன் ஆதரவு திரட்டத் தொடங்கினார். ஒருமுறை ஹிட்லர் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது "சுதந்திரம் பெறக் கூடிய தகுதி இந்தியர்களுக்கு கிடையாது" என்று கூறினார். இந்த கருத்து அருகில் இருந்த செண்பகராமனுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. "இந்தியாவின் பாரம்பரியம், இந்தியத் தலைவர்களின் திறமைகளைப் பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசுவதை என்னால் அனுமதிக்க முடியாது" என்று ஆவேசமாக கூறிய செண்பகராமன், சற்றும் அஞ்சாமல் அனைவரின் முன்னிலையிலும் உலகமே பார்த்து மிரண்ட சர்வாதிகாரி ஹிட்லருடன் இதுதொடர்பாக நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார்.அடுக்கடுக்கான ஆதாரங்களுடனான செண்பகராமனின் வாதத் திறமையை கண்டு வியந்துப்போன ஹிட்லர், இறுதியில் பணிந்தார். தன்னை மன்னித்துக் கொள்ளும்படி அவர் கேட்க செண்பகராமனோ, வார்த்தைகளால் மன்னிப்பு கேட்பதை விட எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேளுங்கள் என்று வற்புறுத்த, ஹிட்லரும் அப்படியே செய்திருக்கிறார்.(எழுத்தாளர் தமிழச்சி பகிர்ந்த செய்தி)
                      **************************





Saturday, 16 August 2014

பாதச் சுவடுகள்



                                      
பாதச் சுவடுகள்

முன்பெல்லாம் தமிழ் கவிஞர்களும் கலைஞர்களும் தங்கள் பாதச்சுவடுகளை பதித்து விட்டுதான் சென்றிருக்கிறார்கள்..
பதித்து வைத்திருந்த பாதச்சுவடுகளை பற்றி நடந்தவர்கள் தான் இன்று மிஞ்சியிருக்கும் கவிஞர்கள்..
புலவர்களின் எண்ணிக்கையும்,
கவிஞர்களின் எண்ணிக்கையும் குறைந்துக் கொண்டே வருகிறது....
மொழியின் வளர்ச்சி மொழிஞரின் வளர்ச்சியை பொருத்தே அமைகிறது..
கவிதைக்கு மறுமலர்ச்சியை தொடங்கியவர் பாரதியார்...
எளிய மொழியில் கவிபாடி பாமரனுக்கும் புரிய செய்து இந்திய விடுதலைக்கு போராடினார்...
பாரதியை பற்றி நடந்தவர் பாரதிதாசன்..
தாசனை வணங்கி வளர்ந்தவர் கண்ணதாசன்..
இவர்களின் வரிசையில் வளர்ந்தவர் தாம் இன்றைய அறுபது வயது தங்கம் வைரமுத்து...
நால்வரில் வைரமுத்துவை மட்டுமே தரிசிக்க முடிந்தது என்னால்...


இவர் தமிழ் கவிஞர் திருவிழாவில் பேசியதை பகிர்கிறேன்...இதோ அவர் மொழியிலையே...

 தமிழ் காதல் மிக்க ஒரு பெருமகன் இந்த விழாவிற்கு தலைமை தாங்கியிருக்கிறார்.அன்று ஆ.பெ.செ.அப்துல்கலாம் குடியரசு தலைவர்.நான் அவர் ரசிகன்.ஐயாவை பார்க்க வேண்டுமென்று அனுமதி கேட்கிறேன்.குடியரசு மாளிகையின் நாங்கு பெருங்கதவுகளும் திறக்கின்றன.என்னை ஒரு காவலர் அழைத்து செல்கிறார்..இங்கே வாருங்கள் எங்கிறார்.சற்று  நேரத்தில் ஐயா வருகிறார்.அவருக்கான அரியாசத்தில் அமர்கிறார்.அந்தக் காவலர் அங்கு நிற்கிறார். நான் பொன்னாடை போற்றுகிறேன்.கண்சாடை செய்கிறார்.காவலர் விடைபெறுகிறார்.காவலர் விடைபெற்ற மறு நிமிடம் தன் ஆசனத்தை விட்டு என் ஆசனத்தில் வந்து அமர்கிறார்.அவரது திறமை,எளிமை,அன்பு.யார் தருவார் இந்த அரியாசனம்.இந்த அரியாசனம் யார் கொடுத்தது?தமிழுக்கு கொடுத்த மரியாதை என்று வைத்துக்கொள்கிறேன்.தமிழ் கவிஞர்க்கு கொடுத்த மரியாதை என்று வைத்துக்கொள்கிறேன்.

ஏன் தமிழை தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறோம்?தமிழ் வெறும் மொழியா?தமிழ் என்பது வெரும் கருத்துக்கருவியா?தமிழ் மொழி என்பது ஒலிக் கூட்டமா?இல்லை..உலக நாகரீகத்துக்கே பங்களிப்பு செய்த பெரிய மொழி தமிழ் மொழி.உயிர்கள் பிறப்பது எதற்கு தெரியுமா?உயிர்கள் பிறப்பதெல்லாம் இன்பத்துக்கு.இன்பம்தான்.செவி வழியாக,நா வழியாக இன்பத்தைத் தேடிதான் இந்த உயிர்கள் பிறக்கின்றன.இன்பத்தில் தேடி அலைந்த மனிதன் இன்பத்தில் முடிகிறான்..இதுதான் மனித வாழ்கை.இந்த இன்பம் எப்படிப்பட்ட இன்பம் என்று சொன்னவர் திருவள்ளுவர்.இந்த இன்பத்திற்காக மெய் மறந்து போகாதே.புற வழியில் போகாதே.இந்த இன்பம் கூட நெறிபடுத்த பட்டிருந்தால் தான் இன்பம்.அற வழியில் வருவதுதன் இன்பம் என்று உலகுக்கு சொன்னவன்தான் தமிழன்.சொன்னவன் தமிழ்க் கவிஞன்.அந்த கவிஞன் கொண்டாட படுகிறான்.இன்னொரு புலவன் சொன்னான், அடே அரசனே, ஒரு நாடு படைகளால் ஆளப்படக்கூடாது..அறத்தால் ஆளப்பட வேண்டும் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சொன்னவன் தமிழ் கவிஞன்.இதுவல்லவோ உலகத்தின் சட்டம். இதுவல்லவோ வாழ்க்கையின் சட்டம்.அமெரிக்கா,ஐரோப்பா,ஆஸ்திரேலியா,ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களெல்லாம் இந்த ஒரு விதியைத்தானே பின்பற்றமுடியும்.
 நாகரீகம் கொண்டவன் தமிழன்.போர் முடிந்தது.படைத்தலைவன் தேரில் வந்து கொண்டிருக்கிறான்.காதலி வீட்டில் காத்திருக்கிறாள்.தலைவன் சோலையைக் கடக்கிறான்.கடந்த தலைவன் ஊகிக்கிறான்.அங்கே பூவின் மீது இரு வண்டுகள் காதல் கொண்டிருந்தன.காதல் கொண்டிருந்த வண்டுகளைப் பார்க்கிறான்.தேர்பாகனே! நிறுத்து.அந்த மணியின் நாவை இழுத்துக் கட்டு.ஒலி செய்யாமல் இந்த சோலையைக் கடந்து போ! இந்த தேரின் மணியில் அந்த வண்டுகளின் காதல் கலைந்து விடக்கூடுமோ என்று..
எப்படிப்பட்ட நாகரீகம். எப்படிப்பட்ட உயர்வு.சாதிக்கு எதிரான குரல் சித்தர்களின் காலத்திலயே தொடங்கியது.சித்தர்களின் காலத்திலையே சொன்னான்,ஏழைப் பணக்காரனைப் பற்றி பேச வில்லை,சாதிக்கு எதிராக பேசினான்.ஒருத்தியை பறைச்சி எங்கிறாய்.ஒருத்தியை பார்பணத்தி எங்கிறாய்,ஒருவனை மேல் எங்கிறாய்,ஒருவனை கீழ் எங்கிறாய்.எப்படி இருக்க முடியும்.அடையாளம் காட்ட முடியுமா?என்றான்.உடம்பில் சாதியை அடையாளம் காட்ட முடியும என்றான்.தோலில் அடையாளம் இருக்கிறதா?எலும்பில் அடையாளம் இருக்கிறதா?என்று கேட்டான்.
காக்கைக்குருவி எங்கள் சாதி என்றான் தமிழன்..அப்படி பட்ட தமிழ் கவிதை அறிவிக்க பட்ட மொழியின் நிலையை யோசித்து பார்ப்போம்.தமிழை செம்மொழியாக அறிவித்தார்கள்.அறிவித்தவர்களுக்கெல்லாம் நன்றி.
அப்படி பட்ட மொழி உயரம் தெரிந்திருக்கிறதா?இல்லை.உலக பொன் மொழிகளின் வரிசையில் தமிழ் இல்லை.இந்து மத இலக்கியங்கள் என்று பட்டியலிட்டு பார்த்தால் உலக நூல்களில் தேவாரம் இல்லை திருவாசகம் இல்லை திருமந்திரம் இல்லை..உலக தமிழ் கவிதைகள் என்று தொகுக்கப்பட்டால் அதில் தமிழ் கவிதைகள் இல்லை.
தமிழ் மொழி அழிந்து விடும் என்று யுனெஸ்கோ அறிவித்திருக்கிறதே,அழிகின்ற மொழிகளில் எட்டாவது மொழி என்று அறிவித்திருக்கிறதே,அதை பொய்பிக்கவே இந்தக் கூட்டம்.
உங்கள் குழந்தைகளை தமிழ் படிக்க வையுங்கள்.தமிழ் சொல்லிக்கொடுங்கள்.தமிழ் பாடமாக பயிற்றுவிக்க வேண்டும்.அதிகார மையங்களில் தமிழ் வேண்டும், நீதி மன்றங்களில் தமிழ் வேண்டும்.
தமிழ் அழியுமென்றால் தமிழர்களின் அலட்ச்சியத்தால் மட்டுமே அழியுமென்பதை மறந்து விடாதீர்கள்.உலகத்திற்கு தமிழைக் கொண்டு செல்வோம்.தமிழை உலகிற்கு கொண்டு செல்வோம் இப்படி ஒரு உறுதிமொழி கொண்டால் தமிழ் வாழும்..நான் ஒன்றும் பெரியக் கவிஞன் அல்ல.நான் ஒன்றும் தமிழுக்கு பெரிய பணி செய்தவன் அல்ல.தமிழுக்கு விசுவாசமான வேலைக்காரன் நான்.தமிழுக்கு விசுவாசமாக இருந்த வேலைக்காரனுக்கே இவ்வளவு சிறப்பு என்றால்,தமிழுக்கு பணி செய்தால்..
வாழ்க தமிழ்,வாழ்க தமிழ் நாடு.யுனஸ்கோ அறிவித்தபடி தமிழ் வீழாது  என்று அடுத்த நூற்றாண்டு வரை சொல்வதற்க்கான செய்திதான் இந்த திருவிழா.வாழ்க தமிழ்..


Monday, 11 August 2014

திண்ணை வீடு?




  திண்ணை வீடு?
கிராமத்து திண்ணை வீடுகள் நிறைய கதைகள் சொல்லும்...

திண்ணைகளில் ஒளிந்திருந்தது, தமிழ் பண்பாடு.

களிப்பான கலாச்சாரம்!!!!

மறந்து போன மடமைகள் நாம்...


முந்தைய தமிழன் வீடுகளில்,

திண்ணை என்றொரு அங்கமுண்டு..

வழிப்போக்கர்கள் ஓய்வெடுப்பார்கள்..

விருந்தோம்பலும் நடக்கும்...

சம்மணமிட்டு அமர்ந்தார்கள்.....





சாப்பிடும் போது,

‘கால்கலுக்கு குருதி ஓட்டம் தேவையில்லை’ என்று அன்றே அறிந்தவர்கள்..

                       ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று

அன்புக்கு அடித்தளம் அமைத்து வாழ்ந்தவர்கள்.....

பாட்டி வைத்தியத்தில்  நோயை தீர்த்தார்கள்...

கோலம் போடுவதில் கூட இரக்கத்தை காட்டியவர்கள் தமிழச்சிகள்..



இன்றைய தமிழன் வீடுகளில்,

ஆங்காங்கே, அடுக்கு மாடி கட்டிடங்களும்,

அவற்றை சுற்றி இறுக கட்டிக் கொண்டு நிற்கும் சுற்று சுவர்களும் தான்!!!

திண்ணை மண்ணோடு மண்ணாகி விட்டது!!!

சுதந்திரம் என்ற பெயரில் சொந்தம் மறந்து அலைகிறோம்!!!!

நாற்காலியில் அமர்ந்துதான் உண்கிறோம்,

உணவு முறையையும் மாற்றி கொண்டு நோய்களை சம்பாதித்து கொண்டிருக்கிறோம்..

கோலம் போடுவதும் , தாவணி உடுத்துவதும்

விழாக்காலங்களில் மட்டுமே நிகழ்கிறது இங்கு!!!!.


பூ வைப்பதற்கு புது புது அர்த்தகள்!!!
தமிழ்,அரசியல்வாதிகளின் உடையாகவே மாறிவிட்டது வேட்டி!!!
பாட்டி சொன்ன கதைகளை மறந்து போன தலைமுறைகளாய் வாழ்கிறோம்...

“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து”-என்ற குறளை மறந்து விட்டோம் போலும்..

கிராமம் என்றொடு அமைப்பு இல்லையெனில் என்றோ முற்றிலும் அழிந்திருக்கும் தமிழர் பண்பாடு...

கலாச்சாரத்தையும் ,பண்பாட்டையும் அழித்து வருவதா நாகரீக வளர்ச்சி??