Showing posts with label அறிவோம். Show all posts
Showing posts with label அறிவோம். Show all posts

Tuesday, 5 August 2014

அறிவியல் தமிழ்



அறிவியல் தமிழ்

தமிழ்,

     உலக பொதுமறையை உலகிற்கு உணர்த்திய மொழி!

     ஔவையாரின் கைவண்ணத்தையும் காட்டிய மொழி!

     நீதிக்கு போரடிய பேதையின் காவியத்தைக் கண்டு கலங்கிய மொழி!

     இலக்கணத்திற்கும் முதலிலே இணங்கிய மொழி!

     விலைமாதுவின் மகளையும் உலக குருவாக்க உதவிய மொழி!

     உறவின் பிரிவின் வலியையும் உணர்த்திய மொழி!

     பழமையான மொழிகளையும் உபயோகிக்க கொடுத்த மொழி!

     கம்பரையும் கவிபாட வைத்த மொழி!

     தூதுக்கும் துணைபுரிந்த மொழி!

     அகத்தையும்,புறத்தையும் கூட வகுத்தளித்த மொழி!

     அனைத்து மதத்தையும் ஏற்றுக்கொண்ட மொழி!




     இத்துணை சிறப்பு வாய்ந்த நம் மொழியில்

     அறிவியல் மட்டும் எழுதப்படாமலே உள்ளதே!!!!!!!



அணுவைப் பிளந்து ஆழ்கடலைத் துளைத்து குறுக தறித்தக் குறள்”

அணுவையும் அன்றே எழுதினோம்.

ஆனால் அறிவியலாய் வளரவில்லை....

இன்றோ,அணுவின் தந்தை மேலைநாட்டுக்காரன்..

அறிவியல் தமிழில் எழுதவேண்டும்...

அறிந்துக்கொள்ளுதல் நமது மொழியிலயே இருக்க வேண்டும்.

தமிழன்!!

அறிவை தமிழில் பெறும்போது புரிதல் பல பரிமாணங்களில் பிறக்கிறது.

கம்பராமாயணம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

ஏன் கணிதவியல் மொழிபெயர்ப்பு செய்து தமிழுக்கு கொண்டு வரவில்லை??...



பொறியியல்,தொழில் நுட்பம்,மருத்துவம்,விவசாயம் எல்லாம் தமிழில் எழுதப்பட வேண்டும்.

மாணவர்கள் தமிழில் படிக்கவேண்டும் இவைகளை...

எவன் ஒருவன் தன் சொந்த மொழியில் அறிவைப் பெறுகிறானோ,

அவனே முழுமையான அறிவைப் பெறுகிறான்!!!

என்று அறிவியல் தமிழில் எழுதப்படுகிறதோ அன்றிலிருந்து தமிழ் உலக மொழியாக மாறும் என்பதில் ஐயமில்லை..

விஞ்ஞான நூல் தமிழில் இயற்றப்படவேண்டும்...

தமிழன் அறிவியலை தாய் மொழியிலயே பருக வேண்டும்...

அறிவோம் அறிவியல் தமிழை!!!
                    பகிர்வோம் அறிவியல் தமிழை!!!