Showing posts with label மை. Show all posts
Showing posts with label மை. Show all posts

Friday, 13 March 2015

என் பேனா மை என்னிடம் கோபித்துக்கொள்ளவில்லை


எழுததான் ஆசை..
எதை எழுத வேண்டுமென்று தெரியவில்லை...
இருப்பினும் எழுதுகிறேன்...
எதை எழுதுகிறேன் என்று தெரியாமலே...

எழுது எழுது என்கிறது மனது.
எதை எழுத வேண்டுமென்று மட்டும் கூற மறுக்கிறது...
எழுதி எழுதி பார்த்தும் என்ன எழுதுவதென்று மட்டும் தெரியவில்லை...
இருப்பினும் கை  நிறுத்தவில்லை...
கிறுக்குகிறேன் என்று தெரிந்தும்
  என் பேனா மை என்னிடம் கோபித்துக்கொள்ளவில்லை...
தொடர்ந்து எழுதுகிறது..
அதற்கும் தெரியவில்லை எதை எழுதுகிறோம் என்று...

நிறுத்த மனமில்லை...
ஏதும் தோன்றவில்லை..
இருந்தும் எழுதுகிறேன்.....
ஏன் எழுதுகிறேன்ன்???
எல்லோரும் எழுதுகிறார்கள் என்றா???
எழுதினால் எனக்கென்ன கிடைக்கப்போகிறது???
ஏன் எதைப்பற்றி எழுதுவதென்று தெரியாமலே எழுதுகிறேன்???
ஏன் இப்படி ஒரு பைத்தியக்காரத்தனம்???
ஏன்,எதற்கு இப்படி தோன்றுகிறது???
விடைகள் தெரியாமல் எழுதுகிறேனா????விடைகள் தேடி எழுதுகிறேனா???

                        ************************************
img src

reply here